News March 18, 2024
காஞ்சிபுரம்: 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் , 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்
Similar News
News February 10, 2026
காஞ்சிபுரத்தில் 200 கிராம உதவியாளர்கள் கைது!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 5ஆவது நாளான நேற்று(பிப்.9) வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போலீசார் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News February 10, 2026
காஞ்சிபுரத்தில் கொந்தளித்த மக்கள்!

சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் குடியிருப்பு பகுதி மற்றும் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இது திறக்கப்பட்டால், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News February 10, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


