News April 21, 2025

காஞ்சிபுரம்: வறுமை நிலை நீங்க வேண்டுமா…? இங்கு போங்க

image

பல்லவ தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் ஒன்றான யதோத்காரி பெருமாள் கோயில் கி.பி 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையில், தலைமை தெய்வமான யதோத்கரி, புஜங்க சயனத்தில் உள்ள பாம்பு மஞ்சத்தில் மேற்கு நோக்கி சாய்ந்துள்ளார். வறுமையில் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால் மாற்றங்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை, வறுமை நிலை மாற நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 2, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 01.11.2025 காலை 6 மணி முதல் 02.11.2025 காலை 6 மணி வரை எந்தத் தாலூகிலும் மழை பதிவாகவில்லை என TNSDMA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களில் 0 மிமீ என பதிவாகியுள்ளது. மனிதன், மாடு, வீடு உள்ளிட்ட சேதங்கள் எதுவும் இல்லை என அறிக்கை கூறுகிறது.

News November 2, 2025

காஞ்சிபுரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு GOOD NEWS!!

image

காஞ்சி தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு சாகுபடியுடன் தோப்பாகவோ அல்லது வரப்புகளை சுற்றி (பார்டர் கிராப்) வைக்க விலைமதிப்புள்ள தேக்கு மரம், மகாகனி, வேங்கை, செம்மரம் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு மானியத்தில் மரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை அதிகாரிகளை 95855 80403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!