News April 19, 2024
காஞ்சிபுரம்: வரிசையில் நின்று வாக்களித்த கலெக்டர்

காஞ்சிபுரம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் இன்று மக்களவைத் தேர்தலை ஒட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

காஞ்சிபுரத்தில் (அக்-18) இரவு 10 மணி முத காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு அவர்களின் உதவியை பெறலாம். தொலைபேசி மூலம் அல்லது 100 டயல் செய்து தொடர்பு கொள்ளலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
News October 18, 2025
சாலவாக்கம் அருகே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்

சாலவாக்கம் பஜார் வீதி செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலநிலை தொடர்கிறது. இப்போதெல்லாம் அடிக்கடி மழை வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பயணிக்க முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இனியும் மழை தொடருக்கும் என்பதால் விரைவில் இந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
News October 18, 2025
காஞ்சிபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

காஞ்சிபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!