News September 8, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Similar News
News September 8, 2025
காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
கட்சியில் இருந்து நீக்கியதற்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாள் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருகை தந்திருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் கட்சியிலிருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
News September 8, 2025
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்