News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆலப்பாக்கம், உத்திரமேரூரில் உள்ள சிறுபினாயூர், வாலாஜாபாத்தில் உள்ள உள்ளாவூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தண்டலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாமானது நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17349015>>தொடர்ச்சி<<>>

Similar News

News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350652>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்றவற்றை செய்யலாம். அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (காஞ்சிபுரம் – 044-27237424, 044-27222776, ஸ்ரீபெரும்புதூர் – 044-27162231, உத்திரமேரூர் – 044-27272230) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!