News September 7, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News September 8, 2025
காஞ்சிபுரம் வரும் துணை முதல்வர்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 9) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். காந்தி சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
News September 8, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 8, 2025
உத்திரமேரூர்: ஏரி சீரமைப்பிற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம், உத்திரமேரூர் இடையே செய்யாற்றின் குறுக்கே, மாகரல் பகுதியில் 2019-ல் ₹8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் மதகுகள் கடந்த ஆண்டு பருவமழையில் சேதமடைந்தன. இதனால், காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயும் பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க தற்போது ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.