News December 26, 2025
காஞ்சிபுரம்: புரோக்கர் கத்தியால் குத்திக் கொலை!

வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஷ்(41). ரியல் எஸ்டேட் தரகரான இவர், சுரேஷ்(40) என்பவரிடம் ரூ.34,000 கடன் வாங்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், அடகு வைத்த நகையை விற்று பணம் தருவதாக சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை காத்திருக்க வைத்தார் லிங்கேஷ். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷின் நண்பர் சரத்குமார், லிங்கேஷை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
Similar News
News December 27, 2025
காஞ்சிபுரம்: மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

காஞ்சிபுரம், கிளார் கிராமத்தில் உள்ள வேகவதி ஆற்றில், மணல் திருட்டு நடைபெறுவதாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ரகுராமன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் நேற்று (டிச.27) கைது செய்த்தனர். மேலும், இந்த திருட்டில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 27, 2025
காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் போதும் சூப்பர் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4. விருப்பமுள்ளவர்கள் <
News December 27, 2025
காஞ்சிபுரத்தில் லஞ்சமா ? சட்டுனு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!


