News October 21, 2025

காஞ்சிபுரம்: பட்டு சேலைகளின் விலை உயர்வு!

image

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.50,000 வரை உயர்ந்து, ரூ.1.35 லட்சமாகியுள்ளது. இதனால் சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.10,000-15,000லிருந்து ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.இதனால் சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக பட்டு சேலை இருக்கிறது. இப்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழிலுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது

Similar News

News October 21, 2025

காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

காஞ்சிபுரம்: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!