News December 27, 2025
காஞ்சிபுரம்: திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை!

உத்திரமேரூர் ஒன்றியம் அண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மணிகண்டன் (25). டிரைவராக வேலை செய்து வந்த இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் வயிற்று வலிக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இவர் இறந்தார்.
Similar News
News January 19, 2026
காஞ்சிபுரம் மக்களே இலவச WIFI வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News January 19, 2026
காஞ்சிபுரம்: தோழி கண் முன்னே துடிதுடித்து பலி!

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(21), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், படூரைச் சேர்ந்த திவ்யா(25) என்பவருடன் நேற்று முன் தினம் போரூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு, குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், தரப்பாக்கம் அருகே பைக் தடுமாறியதில் விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரவீன் குமார் தனது தோழி கண் முன்னரே உயிரிழந்தார்.
News January 19, 2026
காஞ்சிபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரத்திற்கு வரும் ஜன. 25 முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


