News October 23, 2025
காஞ்சிபுரம்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.24) வெள்ளி அன்று நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 23, 2025
காஞ்சிபுரத்தில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
மோசமான நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ரூ.80 லட்சம் செலவில் 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும், மழைநீர் கால்வாய்கள் உடைந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேபோல், சாலையில் பெரிய அளவிலான பள்ளங்களுடன் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News October 23, 2025
காஞ்சிபுரத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விபரம்

காஞ்சிபுரத்தில் நேற்று அக் (22) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


