News January 18, 2026
காஞ்சிபுரம்: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

காஞ்சி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News January 26, 2026
காஞ்சிபுரம்: : ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 26, 2026
உத்திரமேரூரில் வெகுண்டெழுந்த மக்கள்!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், ஆலஞ்சேரி கிராமம் அருகே கல்குவாரி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அந்தப் பகுதியில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு முன் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றதால் ஆலஞ்சேரி சுற்றுவட்டார பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருமுக்கூடல் சாலையில் திரண்டு, லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News January 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


