News March 27, 2024
காஞ்சிபுரம்: கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயில் குளத்தில், நேற்று(மார்ச் 26) 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக பறவை இறந்து கிடந்தது. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகேம் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று(பிப்.19) மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, இறந்த பறவைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தாமல், கால்நடை மருத்துவ துறைக்கு தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

ஒரகடம் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதை வஸ்துக்கள் கொரியர் மூலம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த துரைசெல்வன்(27) என்பவரை கைது செய்தனர்.
News February 19, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


