News April 25, 2024

காஞ்சிபுரம்: குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இன்று(24.04.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News January 31, 2026

காஞ்சிபுரத்தில் ஹவுஸ் ஓனர் தொல்லையா..? CALL

image

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகம் அறிவித்துள்ளார். இந்தப் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமுள்ள இளைஞர்கள் 9444094286-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேர் பலி!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. ஆடோ டிரைவரான இவர் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் சென்றார். சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதியதில் ஆடோவை ஓட்டி வந்த தனி(22), அகரமைச் சேர்ந்த தனபால்(42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் சென்ற மூன்று பேர் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!