News August 16, 2025
காஞ்சிபுரம்: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள்<
Similar News
News March 4, 2026
உத்திரமேரூர் அருகே விரைவில் மினி ஸ்டேடியம்!

காஞ்சி: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சிறிய விளையாட்டு அரங்கம் (Mini Stadium) கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
News March 4, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையம் திறனகத்தை மாவட்ட ஆட்சியர் சினேகா குத்துவிளக்கேற்றி நேற்று(மார்ச் 3) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, துறை துணை இயக்குனர் கி.செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.
News March 4, 2026
காஞ்சிபுரத்தில் 14 பவுன் நகைக் கொள்ளை!

படப்பை, ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(39). இவர், மறைமலைநகர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது, சில மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


