News November 3, 2025

காஞ்சிபுரம்: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின், மக்கள் நல்வரவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.03) காலை 9 மணி முதல் தொடங்க உள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Similar News

News November 3, 2025

காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க

News November 3, 2025

காஞ்சி: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 3, 2025

வாலாஜாபாத்-அவளூர் இடையே உயர்மட்ட பாலம்

image

வாலாஜாபாத் பாலாற்றின் குறுக்கே ரூ.75 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான டெண்டர் இம்மாத இறுதியில் விடப்படவுள்ளது. டிசம்பரில் பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. பாலம் 15 மீட்டர் அகலமும் 715 மீட்டர் நீளமும் கொண்டதாக உருவாக்கப்படவுள்ளது. பாலாறு வெள்ளத்தில் மூழ்கும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், இந்த புதிய பாலம் வாலாஜாபாத் மற்றும் அவளூர் மக்களுக்கு பயனுள்ளதாகும்.

error: Content is protected !!