News February 14, 2026
காஞ்சிபுரம் அருகே தம்பதி துடித்துடித்து பலி!

சென்னையை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44. இவரது மனைவி கவிதா(42). இருவரும் ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே சென்ற போது சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News February 18, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகிறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
காஞ்சிபுரத்தில் மின்சாரப் பிரச்னையா..?

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் மின் கோட்டங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், நாளை(பிப்.19) காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், ரயில்வே சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில், உங்களது மின்சாரம் சார்ந்த எந்த வித குறைகளையும் தெரிவிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 18, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.


