News January 16, 2026

காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

image

காஞ்சிபுரத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

Similar News

News January 23, 2026

BREAKING: காஞ்சியில் கனமழை வெளுக்கும்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

காஞ்சி: EB பில் எகுறுதா..?

image

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

காஞ்சி: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் 23.01.2026 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 11.00 மணிக்கு, மக்கள் நல்லுறவு கூட்டரங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!