News March 1, 2025

காஞ்சிபுரத்தில் வரி விதிப்பில் முறைகேடு?

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாநகராட்சி முழுதும் உள்ள 51 வார்டுகளிலும், 52,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிக்கும் பில் கலெக்டர்கள், கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும், ‘கமிஷன்’ பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வரி விதிப்பு செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Similar News

News April 21, 2025

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கலெக்டர் அட்வைஸ்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் குடிநீர் குடில்கள், ORS கரைசல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும், வெயிலில் நேரடியாக பணியாற்றும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் குடிநீர் இருக்க வேண்டும் என்றார். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஒரகடம் அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (23) ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) இரவு பைக்கில் ஒரகடத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு சென்றார். அப்போது, ஒரகடம் துணை மின் நிலைய சந்திப்பில் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.

News April 20, 2025

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

image

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!