News April 16, 2025

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: நடவடிக்கை தேவை

image

காஞ்சிபுரத்தில், ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பல இடங்களில் தற்போது வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

Similar News

News January 26, 2026

காஞ்சிபுரத்தில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

காஞ்சிபுரம்: : ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 26, 2026

உத்திரமேரூரில் வெகுண்டெழுந்த மக்கள்!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், ஆலஞ்சேரி கிராமம் அருகே கல்குவாரி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அந்தப் பகுதியில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு முன் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றதால் ஆலஞ்சேரி சுற்றுவட்டார பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருமுக்கூடல் சாலையில் திரண்டு, லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

error: Content is protected !!