News September 15, 2024

காஞ்சிபுரத்தில் குரூப் 2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்

image

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2, 2ஏ தேர்விற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 45 தேர்வு மையங்களில் 65 அறைகளில் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. இதில், 13,965 பேர் தேர்வு எழுதினர். மீதம், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 23, 2025

காஞ்சிபுரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? இதற்கு தமிழக அரசின் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

காஞ்சிபுரம்: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <>படிவத்தை <<>>பூர்த்தி செய்து செப்.19குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News August 23, 2025

காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

image

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

error: Content is protected !!