News March 22, 2024
காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு தேரடி அருகே வரும் திங்கள் அன்று மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News October 26, 2025
காஞ்சி: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

காஞ்சி மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர்
News October 26, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<
News October 26, 2025
காஞ்சி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் ரபி பருவத்தில் நெல் II பயிர் 464 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் II பயிருக்கான விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் ஆகும். ஆகையால் நெல் II (சம்பா) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.545 பிரீமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவிப்பு.


