News January 20, 2026

காஞ்சிபுரத்தில் இருவர் துடிதுடித்து பலி!

image

ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்(19), பாலமுருகன்(19). இவர்கள், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று(ஜன.19 வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு பைக்கில் இருவரும் வாலஜா நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரகடம் அருகே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 3, 2026

காஞ்சிபுரம்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

News February 3, 2026

ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(57). பழக் கடை வியாபாரியான இவர், நேற்று(பிப். 2) இரவு பழக் கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பழக் கடையில் வேலை செய்யும் அபிமன்யு என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது தனியார் கம்பெனி வேன் மோதியதில் அபிமன்யு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

News February 3, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் வருகிற பிப்.23ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளான் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!