News September 18, 2025

காஞ்சிபுரத்தில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 18, 2025

காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் செப்.,22 முதல் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

காஞ்சிபுரம்: தலை நசுங்கி ஒருவர் பலி!

image

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (52) ஆச்சாரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (செப்.,18) தனது மகளுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிக்கை, மிலிட்டரி ரோடு சத்யா நகர் பகுதியில், பணியாளர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!