News September 19, 2025
காஞ்சிபுரத்தில் இதற்கு அக்டோபர் 15ம் தேதி கடைசி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விற்பனையகம் அமைக்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
காஞ்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை!-அதிகாரி கைது!

காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் என்பவர் இவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க போலீசார் ராகேஷை கைது செய்தனர். இவர் வேளாண் அதிகாரியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
News September 19, 2025
காஞ்சிபுரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்வெளியிட வாக்காளர் பதிவு அலுவலர் முருகானந்தம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ உள்ளார்.