News October 26, 2024
காஞ்சிபுரத்திலிருந்து சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து

காஞ்சிபுரம் சிப்காட்டில் இருந்து திருநெல்வேலி காவல்கிணறு இஸ்ரோ மையத்திற்கு சென்ற மினி சரக்கு வாகனம் நாங்குநேரி மூன்றடைப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து வேன் மீது மோதியது, சரக்கு வாகனம் நொறுங்கியது. இதில் மினி சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்தனர்.
Similar News
News February 3, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(57). பழக் கடை வியாபாரியான இவர், நேற்று(பிப். 2) இரவு பழக் கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பழக் கடையில் வேலை செய்யும் அபிமன்யு என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது தனியார் கம்பெனி வேன் மோதியதில் அபிமன்யு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
News February 3, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் வருகிற பிப்.23ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளான் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.02) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


