News September 26, 2025
காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, வாக்காளர்கள் குளறுபடி குறித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும், அவர் கூறுகையில் பாஜக அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறப்போவதாகவும், 2 கோடி கையெழுத்து பெறுவதை லட்சியமாக வைத்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News January 7, 2026
BREAKING: ஸ்ரீபெரம்பத்தூரில் கடைகள் இழுத்து மூடல்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கிய குடோன்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. கைவல்யம் நகரில் செயல்பட்டு வந்த குடோன்கள், ஆலைகளால் காற்று, ஒலி மாசு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்ததில் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிகாரிகள் வழங்கிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கப்படாததால் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
காஞ்சி: இனி கையில் ஆதார் கார்ட் தேவையில்லை

காஞ்சி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 7, 2026
காஞ்சி: வீட்டின் பின்புறம் நேர்ந்த விபரீதம்

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தந்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம்மா (75). இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


