News January 10, 2026
கவுந்தப்பாடி அருகே விபத்து: ஒருவர் பலி

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவரது நண்பர் தங்கராஜ். இருவரும் பைக்கில் கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக எதிரே வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிகிச்சை பலனின்றி சரவணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புகாரின் படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News February 5, 2026
ஈரோடு: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News February 5, 2026
ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! APPLY NOW

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <


