News September 10, 2025

கவின் கொலை வழக்கு – மூவருக்கு காவல் நீட்டிப்பு

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான் சுர்ஜித் அவரது தந்தை சரவணன் உள்பட மூவரின் நீதிமன்ற காவல் நேற்று 9ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாளை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிபதி ஹேமா மூவருக்கும் 15 நாட்கள் காவல் நீட்டித்தார். அதன்படி வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Similar News

News September 10, 2025

அபிஷேக பட்டி அருகே நாய் கடித்து மான் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் மான் பூங்கா சரணாலயத்தில் இருந்து வெளியேறும் மான்கள் மானூர், அபிஷேகப்பட்டி, மாறாந்தை பகுதிகளில் நடமாடுகின்றன. இந்நிலையில் கல்லத்திகுளம் கிராமத்தின் மேல் புறமுள்ள குன்றில் நேற்று தண்ணீர் அருந்த வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்தன. இதில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. வனத்துறையினர் மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2025

இட்டமொழி அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து

image

இட்டமொழி அருகே அழகப்பபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சேர்மராஜ்(50) கீழபண்டாரபுரத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று மாலை பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து, மளமளவென பரவியது. திசையன்விளை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. பெரும்பாலான கோழிகள் முன்பு விற்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர் .

News September 10, 2025

நெல்லை: மின்சாரம் தொடர்பான புகாரா?

image

நெல்லையில் சமீபத்தில் ஒருவருக்கு ரூ.1 கோடியே 60 இலட்சம் மின் கட்டணமாக வந்தது. விசாரணையில் அது பிழை என கண்டறியப்பட்டது. ஆகவே மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL APP) பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!