News January 22, 2025
கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு திருநின்றவூரை ஜெயா அறிவியல் கலைக் கல்லூரியிலும், பள்ளி மாணவர்களுக்கு டி.ஆர்.பி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும் வரும் 24ஆம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.10,000, 2ஆம் பரிசு ரூ.7,000, 3ஆம் பரிசு ரூ.5,000ஆகும்.
Similar News
News September 9, 2025
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 383 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் நிலம் சம்பந்தமாக 39 சமூக பாதுகாப்பு திட்டம் 22 வேலை வாய்ப்பு வேண்டி 28 பசுமை வீடு அடிப்படை வசதி வேண்டி 19 இதர துறை சார்பாக 275 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
News September 8, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 8, 2025
திருவள்ளூர்: காயலான் கடையாக மாறிய ஆர்.டி.ஓ., அலுவலகம்

திருவள்ளூர்: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பறிமுதல் வாகனங்களை போலீசார் குவித்து வைத்துள்ளதால், காயலான் கடை போல் மாறியுள்ளது. நன்றாக உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காயலான் கடை போல் உள்ளது. இதனை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.