News December 18, 2025
கள்ளத்தனமாக மது விற்றால் கடும் நடவடிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (டிச.18) நடத்தப்பட்ட சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 20, 2025
வேலூர்: மர வியாபாரி திடீர் சாவு.. போலீஸ் தீவிர விசாரணை!

வேலூர் சாத்து மதுரையை சேர்ந்தவர் முருகன் (47) மர வியாபாரி. இவர் நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (டிச.20) முருகன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
வேலூர்: லாரி மீது சொகுசு பேருந்து மோதல்!

சென்னையிலிருந்து 30 பயணிகளுடன் பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று (டிச.20) காலை 4 மணிக்கு வேலூர் அடுத்த மோட்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்பு சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
News December 20, 2025
வேலூர்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


