News June 25, 2024
கள்ளச்சாராயம்: ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், நேற்று கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், அரசு மதுபானங்கள் அங்கீகாரம் பெறாத தனி நபர்கள் விற்பனை செய்வதை தடுப்பது, போதை பொருட்களை தடுப்பு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டையில் சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணன்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தம்பி பச்சையப்பனை தாக்கி கொலை செய்த அண்ணன் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று (செப்.12) தீர்ப்பளித்தது. நிலத் தகராறு காரணமாக 2015ஆம் ஆண்டு பச்சையப்பனை கொன்ற வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தார்.
News September 13, 2025
ராணிப்பேட்டை: சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

ராணிப்பேட்டை, வாலாஜாவைச் சேர்ந்த செந்தில்நாதன் (44) என்பவர் டியூஷனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த அவரை, திருச்செந்தூரில் சாமியார் வேடத்தில் திரிந்தபோது போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
News September 13, 2025
அண்ணல் அம்பேத்கர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் நபர்களிடம் இருந்து, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருது பெற விரும்பும் நபர்கள், விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்.