News July 18, 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 11, 2025

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் குரூப் 4 தேர்வு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 97 தேர்வு கூடங்களில் 28,211 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வினை கண்காணிப்பதற்காக 30 சுற்றுச்சூழல், 102 காவல் அலுவலர்கள், 97 கண்காணிப்பு அலுவலர்கள், 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!