News June 28, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம் – யாரையும் தண்டிக்க முடியாது – கி.வீரமணி

image

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தை காட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள் என்றார்.

Similar News

News July 10, 2025

வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
” பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29க்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும் ” என்று மதுரை வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

News July 10, 2025

மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

image

மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆரப்பாளையம் பஸ் நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் நகர, புறநகர் பஸ்கள் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் வழியாக செல்லவேண்டும்.ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் நகர் பஸ்கள் குருவி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

error: Content is protected !!