News February 22, 2026
கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

கள்ளக்குறிச்சி வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
Similar News
News February 27, 2026
கள்ளக்குறிச்சி: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News February 27, 2026
கள்ளக்குறிச்சி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

கள்ளக்குறிச்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News February 27, 2026
திருக்கோயிலூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

திருக்கோவிலூர்: திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தேவராஜ் என்கிற கேப்டன் (20). இவர், திருக்கோயிலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுமியின் தாய் அறிந்த நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


