News October 26, 2025

கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தைச் சேர்ந்த நீலகிரி மின் ஊழியர் கொளஞ்சியப்பன் (47), தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கனமழையால் வீட்டில் மின் விளக்குகள் எரியாத நிலையில், நேற்று மாலை மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் சுவிட்ச் போர்டை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

Similar News

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

கள்ளக்குறிச்சியின் சிறந்த ஊராட்சிக்கு விருது!

image

வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரையின்படி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சனா காமராஜ்க்கு சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங் வழங்கிக் கௌரவித்தார்.

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கள்ளக்குறிச்சி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.SHARE IT

error: Content is protected !!