News September 16, 2025

கள்ளக்குறிச்சி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

image

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் ரூ 22.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News September 16, 2025

கள்ளக்குறிச்சி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000

image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். <<17727017>>தொடர்ச்சி!<<>> SHARE IT

News September 16, 2025

அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

image

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17727011>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

News September 16, 2025

சங்கராபுரம் அருகே பதற்றம்! போலீசார் குவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மேலப்பட்டு கிராமத்தில் முனியப்பன் கோயிலுக்கு பொங்கல் வைக்க இரு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. மேலும் பொங்கல் வைக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான இடம் என கூறி காவல்துறையும் பொங்கல் வைக்க தடை விதித்தது. இன்று தடையை மீறி கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

error: Content is protected !!