News October 10, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

கள்ளக்குறிச்சி: தீராத வயிற்றுவலி – முதியவர் சோக முடிவு!

image

கள்ளக்குறிச்சி: வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையாப்பிள்ளை (79). இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நெல்லுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News December 30, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

கள்ளக்குறிச்சி: பெரம்பலூரில் இருந்து ஒரு தம்பதியினர் கிணறு வெட்டும் பணிக்காக சின்னசேலம் வந்துள்ளனர். இவர்களது மகள் (14) 9ம் வகுப்பில் பயின்று வருகிறார். இந்நிலையில், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர் போலீசார்.

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்!

error: Content is protected !!