News August 16, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) இரவு 10 மணி முதல், நாளை சனிக்கிழமை (16.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News August 16, 2025

கள்ளக்குறிச்சில்: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

image

உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News August 15, 2025

தென்தொரசலூரை சார்ந்த மூதாட்டி பலி

image

தென்தொரசலூரை சேர்ந்த தங்கம்மாள் ஆகஸ்ட் 9-ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள குளத்துக்கு அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாழியே சென்ற காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தங்கம்மாள் மீது பைக்கால் தெரியாமல் மோதியுள்ளார். இதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 15, 2025

விஐபி கார்டன் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு

image

கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை கள்ளக்குறிச்சி விஐபி கார்டன் முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக சரத்குமார் இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!