News March 26, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பாக மாவட்ட அளவிலான முதல் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் இன்று (26.03.2025) புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 2, 2025
குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
News April 2, 2025
சமூக சேவைக்கு விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 2025ஆம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<