News August 6, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 3, 2026
கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு<
News March 3, 2026
கள்ளக்குறிச்சியில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!
News March 3, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிசில் முக்கிய விவாதம்!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.


