News August 12, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் மூடல்

image

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவால், ஒரு மாணவர் கூட இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஆறு பள்ளிகள் மூடப்பட இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக் அறிவிப்பால் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 32 பள்ளிகள் கள்ளக்குறிச்சியில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 13, 2025

விலாசம் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

image

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்திரை தனது விவசாய நிலத்தில் மாட்டு சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது, விலாசம் கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து 7 சவரன் தாலிச் சங்கிலியை 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

News August 12, 2025

கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிப்பு

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே கள்ளக்குறிச்சி நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT

News August 12, 2025

கள்ளக்குறிச்சி மக்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

image

▶️நகராட்சி- 3 (கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டை)
▶️பேரூராட்சிகள்- 5
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-7
▶️வருவாய் குறுவட்டம்- 34
▶️வருவாய் கிராமங்கள்-562
▶️ஊராட்சி ஒன்றியம்-9
▶️கிராம பஞ்சாயத்து-412
▶️MP தொகுதி-1 (கள்ளக்குறிச்சி)
▶️MLA தொகுதி- 4
▶️மொத்த பரப்பளவு – 3529.67 ச.கி.மீ
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!