News September 29, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் இணைப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 8 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தென்கீரனூர், நீலமங்கலம், கா.மாமனந்தல்,மாடூர், பெருவங்கூர், சிறுவங்கூர், வீ.பாளையம், வீரசோழபுரம் ஆகிய எட்டு ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி நகராட்சியுடன் இணைத்து அரசாணையானது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.திருக்கோவிலூரில் இரண்டு ஊராட்சிகளும்,உளுந்தூர்பேட்டையில் ஏழு ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.
Similar News
News September 7, 2025
கள்ளக்குறிச்சி: சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.
News September 7, 2025
கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க