News April 24, 2024
கள்ளக்குறிச்சி: போலி நகையை அடகு வைத்த பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கடைத்தெரு பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு சரண்யா என்பவர் அடகு வைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்தபோது நகை போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கைது செய்தனர்.
Similar News
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்…

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17510081>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>
News August 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 26, 2025) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெற உள்ளது. உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்னசேலம், மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடைபெறும். இங்கு 13 துறைகளின் கீழ், பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள் உட்பட 43 வகையான சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.