News January 10, 2026
கள்ளக்குறிச்சி: பிழைப்பு தேடி சென்ற இடத்தில் தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவர் திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரகாஷிற்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால், சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 30, 2026
வங்கியாளர்கள் உடன் ஆட்சியர் ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் உடடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மனோகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News January 30, 2026
மருத்துவமனையின் இறுதிக்கட்ட கட்டுமான பணி குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் கௌதம சிகாமணி இன்று நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.


