News April 25, 2024
கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக நேற்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்…

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17510081>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>
News August 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 26, 2025) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெற உள்ளது. உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்னசேலம், மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடைபெறும். இங்கு 13 துறைகளின் கீழ், பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள் உட்பட 43 வகையான சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.