News April 25, 2024
கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக இன்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 29, 2026
ரிஷிவந்தியம் தவெக வேட்பாளர் யார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் அசோக் குமார் என்பவர் போட்டியிடுவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News March 29, 2026
உளுந்தூர்பேட்டை தவெக வேட்பாளர் யார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக சுதாகர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தியாகதுருகம் ஒன்றிய கழகச் செயலாளராக பதவி வகித்து வருகின்றார்.
News March 29, 2026
சங்கராபுரம் தவெக வேட்பாளர் யார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக ஜெகதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


