News March 19, 2024

கள்ளக்குறிச்சி: நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 2, 2025

குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

image

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

News April 2, 2025

சமூக சேவைக்கு விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 2025ஆம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  http://www.sdat.tn.gov.in  இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<> ஷேர் பண்ணுங்க<<>>

error: Content is protected !!