News September 19, 2025

கள்ளக்குறிச்சி: தெரு நாய்களால் விபத்துகள்

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தெரு நாய்களால் கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நேற்று (செப். 18) மாலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: பழ பயிர் சாகுபடி அதிகரிக்க அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் பழப் பயிர்கள் சாகுபடியை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!