News December 4, 2025

கள்ளக்குறிச்சி: தடிமனான தோசை.. மனைவிக்கு உலக்கையால் அடி!

image

கள்ளக்குறிச்சி: அரியபெருமானூரைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). அவரது மனைவி ரேகா, தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். அப்போது தோசையை பார்த்த அவர், தோசை ஏன் இவ்வளவு தடிமனாக உள்ளது எனக் கூறி ஆபாசமாக திட்டி, உலக்கையால் கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் நிறுத்தாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து ரேகா கொடுத்த புகாரின் பேரில், மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

கள்ளக்குறிச்சி பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

கள்ளக்குறிச்சி: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

image

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!