News November 16, 2025
கள்ளக்குறிச்சி: சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே, வடதொரசலூரில் உள்ள தனியார் பள்ளியின் அருகே சிலர் பணத்தை வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழுமலை, சரவணன், மணிவேல் மற்றும் ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1000 மற்றும் 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
கள்ளக்குறிச்சியில் 333 பேர் ஆப்சென்ட்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 2,389 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 2,056 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 333 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (நவ.15) இரவு முதல் (நவ.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


